Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு கேவியட் மனு தாக்கல்

Aug 19, 2020

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், தமிழக அரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கேவியட் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து,  ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்நேற்று (ஆகஸ்டு 18) சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தூத்துக்கு மாவட்ட மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. மேலும்,  அரசியல் கட்சி தலைவர்களும் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,  ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தல் இன்று தமிழகஅரசு சார்பிலும, , மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும்   கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Post navigation

அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி!
விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் நடத்த திட்டமா? வைரலாகும் எச்.ராஜாவின் வன்முறை பதிவு…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer