கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் “கைதி”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு தயாரித்தார்.

இந்நிலையில் ‛‛இது தனது கதை, இதை திருடி தான் கைதி உருவாகி உள்ளது, எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என கேரளா மாநிலம் கொல்லம் கோர்ட்டில் ராஜீவ் ரஞ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ‛கைதி’ படத்தை பிற மொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர்.பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.