சென்னை: 

சென்னையில் தீபா வீட்டுமுன் அவரது ஆதரவாளர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா பேரவை ஒன்றை அண்மையில் தொடங்கினார்.  அதற்கு எம். ஜி. ஆர்.அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டார்.

பின்னர் அந்த அமைப்பின் செயலாளராக ராஜா என்பவர் நியமிக்கப்பட்டார்.  ஆனால் அவரை நீக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள்  இன்று தியாகராய நகரில் இருக்கும் அவரது வீட்டின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தீபா ஆதரவாளர்கள், அமைப்பின் செயலாளர் ராஜா மீது ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும், தொண்டர்களிடம் அவர் பணம் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டினர்.