சென்னை,

வட சென்னையில் உள்ள  பிரபலமான  அரசு  ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த தம்பதியினரின் குழந்தை திடீரென காணாமல் போனது. பரபரப்பான இந்த பிரச்சினை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடத்தப்பட்ட அந்த சிறுவனையும், அவனை கடத்திய பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை மூலக்கடை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத்துலா. இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன்   உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் சிறுவன் காணாமல் போனான்.  மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால்,  இதுகுறித்து உடனே போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் சுமார் 50 வயதுமிக்க பெண் ஒருவர் சிறுவனை  அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.  இது அனைத்து மீடியாக்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

அப்போது  கொடுங்கையூர் அருகே உள்ள முத்தமிழ் நகரில் உள்ள டீ கடையில் கடத்தப்பட சிறுவனுடன் ஒரு பெண் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அவரது பெயர் சுபஹணானி என்பது தெரிய வந்துள்ளது.  அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

 

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு வேறு ஏதேனும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.