சென்னை:
டிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்.

இவர் இயக்குநர் சசி இயக்கிய “பூ” திரைப்படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார். அடுத்து நீர்ப்பறவை, வீரம், ஜில்லா, நெடுநல்வாடை ஆகிய படங்களிலும் நடித்தார். தங்க மீன்கள் படத்தில் செல்லாமாளின் தாத்தாவாக பாசமாகவும் கல்யாண சுந்தரத்தின் தந்தையாக கடுமையாகவும் அட்டகாசமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வர் அறையில் பரியனுக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரமாக ராமு நடித்திருப்பார்.

மாரடைப்பு ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.