ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

talin

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ‘‘ பணப்பட்டுவாடா செய்த முதல்வர் எடப்பாடி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து நீண்ட நாட்கள் ஆகியும், காவல்துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, மாநகர போலீஸ் கமிஷனர் நிறைவேற்ற தவறினால் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்துள்ளளார்