சென்னை:
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கிறார்.

ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, கடந்த 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது.

திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து முதலமைச்சர் ஸ்டாலின் வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.