சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி கொரோனாவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளை வீடு திரும்புகிறார்.  மேலும் ஒரு வார காலத்திற்கு முதல்வர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.