சென்னை:
துரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகளவில் மிக இளம் வயதில் பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்களில் பிரக்ஞானந்தாவும் ஒருவர்.

ஏழு வயதில் FIDE மாஸ்டர் பட்டமும், எட்டு(2013) மற்றும் பத்து(2015) வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இளம் செஸ் சாம்பியன் பட்டத்தையும் பிரக்ஞானந்தா வென்றார். தொடர்ந்து 2016இல் உலகின் யங் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்றார்.

இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்று வரும் FIDEworldcup-இல் சதுரங்கப் போட்டியின் 2ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில், ஆர்மீனியா நாட்டின் 37 வயது காப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி வெற்றி பெற்ற வெற்றி பெற்றார்.

இதையறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.