சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு வழங்கிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் உள்பட 18 பேர் தடை செய்யப்பட்ட  குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில்  உரிமை மீறல் குழுவின் இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டார்.