சென்னை:  ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தக் கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

6 வழிச்சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.