டில்லி

சென்ற ஆண்டின் சிறந்த நடிகையாக ‘மாம்’ இந்திபடத்தில் நடித்த ஸ்ரீதேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு 65 ஆம் தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது.   சிறந்த நடிகைக்கான விருது இந்தித் திரைப்படமான ‘மாம்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ ஆர் ரகுமானுக்கு கிடைத்துள்ளது.

அத்துடன் பாடல்களுக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதும் தமிழ்ப்படமான ‘காற்று வெளியிடை’ படத்துக்காக ஏ ஆர் ரகுமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டு லெட் என்னும் தமிழ்ப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது ரித்தி சென் மற்றும் நாகர் கீர்த்தன் ஆகிய இருவருக்கு கிடைத்துள்ளது.

சிறந்த ஜனரஞ்சகப் படமாக பாகுபலி 2 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் ராவ் நடித்த நியுடன் என்னும் படத்துக்கு சிறந்த இந்திப்பட விருது கிடைத்துள்ளது.

வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது மறைந்த இந்தி நடிகர் வினோத் கன்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெகு நாட்களுக்கு முன்பு ‘மூன்றாம் பிறை’ படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்ட ஸ்ரீதேவிக்கு தற்போது தேசிய விருது கிடைத்த போது அவர் உயிருடன் இல்லாதது அவரின் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.