பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பியுடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

நடிகை ஸ்ரீ ரெட்டி,  நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.  முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் புகைப்படங்கள் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.   அத்துடன் தெலுங்கு நடிகர் சங்கம் உறுப்பினர் அட்டை வழங்க மறுப்பதாக அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

 

ஐதராபாத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் மகன் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பலர் காவல்துறை தொல்லைகள் இருக்காது என்று கருதி படப்பிடிப்பு தளங்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர் என்றும் அதிரடியாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராமுடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.   இதையடுத்து ஸ்ரீரெட்டியுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலங்கிப்போய் இருக்கிறார்கள்.

 

ஸ்ரீரெட்டி வெளியிட்ட புதிய புகாரில் கூறியிருப்பதாவது:-

 

“தெலுங்கு பட உலகை 4 பெரிய குடும்பங்கள் ஆட்டிப்படைக்கின்றன.  அந்த குடும்பத்து வாரிசுகளை திரைத்துறையில் வளர்த்து விட அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களை மீறி மற்றவர்கள் சினிமாவில் பிரபலமாவது கடினமான விசயம். அப்படி யாரேனும் வந்தாலும் அவர்களை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி ஒழித்துக்கட்டி விடுவார்கள்.

 

சினிமா பின்னணி இல்லாமல் வந்த உதய்கிரன் போன்றோர் தற்கொலை செய்து இறக்கும் நிலைமையே நீடிக்கிறது.  தெலுங்கு பட உலகின் குறைகளை வெளியில் சொல்லாமல் இருக்க எனக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் நடத்தினார்கள். நான் எனக்காக மட்டுமின்றி மற்ற நடிகைகளுக்காகவும்தான் போராடுகிறேன்” என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.