ராமேஸ்வரம்: இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது. அவர்களை விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது.

இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்படித்ததாக கூறி கடந்த 18 மற்றும் 19ஆம் தேதிகளிலும் தமிழக மீனவர்கள் 55 பேரை ஏற்கனவே கைது செய்த இலங்கை கடற்படையினர், நேற்றும் மேலும் 13 பேரை கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மீனவர்களுடன் அவர் பயணம் ய்த 10 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடல் பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடித்ததால், அவர்களை கைது செய்துளள்தாகவும், , வெளிநாட்டு மீனவர்களினால் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்தியஅரசுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.