நாகை,

மிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வந்தது. பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சில படகுகளை இலங்கை அரசு விடுவித்தது. அந்த படகுகள் இன்று நாகை துறைமுகம் வந்தடைந்தன.

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்தும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் வந்தது.

இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் அரசு சார்பாக பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டும், மீனவர்களை விடுக்கும் இலங்கை அரசு படகுகளை விடுக்க மறுத்து வந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்தியஅரசு நடத்த பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதற்கட்டமாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து நாகை மீனவர்களுக்கு சொந்தமான 16 படகுகளை விடுவித்தது. இதை அங்கிருந்து எடுத்து வர  தமிழக மீனவர்கள் இலங்கை சென்றனர். அவர்கள், இலங்கை அரசால்  விடுவிக்கப்பட்ட 16 படகுகளையும் மீட்டு,  இன்று காலை நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர்.