தனுஷ்கோடி:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் , இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். ஆபத்தான முறையில் 2 குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து ஏற்கனவே 2 குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்தநிலையில், மேலும், நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

ஏற்கனவே இலங்கை தமிழர்களுக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.