சென்னை

டில்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது.

ஸ்பஸ்ஜெட் விமான நிறுவனத்தின் டில்லி செல்லும் விமானம் ஒன்று இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.  அது வானில் ஏறும் சமயத்தில் விமானத்தில் டயர் வெடித்துள்ளது.   அதனால் விமான ஓட்டிகள் விமான நிலையத்துக்கு திரும்ப முடிவு செய்தனர்.   விமானம் மிகவும் கவனத்துடன் தரை இறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.  பத்திரமாக கீழிறக்கப்பட்ட அவர்கள் அனைவரும் விமான நிலைய கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.    விமான நிலைய ஓடுபாதை பரிசோதனைக்காக இன்று மாலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று எரிபொருள் பற்றாக்குறையால் சென்னை விமான நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளது.   இந்த விமானத்தின் பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது சென்னை விமான நிலையத்தில் மிகவும் பரபரப்பு நிலவி வருகிறது.