சென்னை: சென்னையில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் அக்டோபர் 26ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும்.
எழும்பூரில் இருந்து அக்டோபர் 25ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்று சேரும். மறு மார்க்கமாக கொல்லத்தில் இருந்து அக்டோபர் 26ம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 27ம் தேதி 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
திருச்சியில் இருந்து அக்டோபர் 26ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் அக்டோபர் 27ம் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து அக்டோபர் 27ம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் அக்டோபர் 28ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்று சேரும்.
தஞ்சையில் இருந்து அக்டோபர் 26ம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரயில் அக்டோபர் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும். எழும்பூரில் இருந்து அக்டோபர் 27ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் அக்டோபர் 28ம் தேதி காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.