சென்னை

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை செண்டிரல் – கன்னியாகுமரி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தென்னக ரயில்வே பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை – சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது

தெற்கு ரயில்வே இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“கன்னியாகுமரியிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 8.30 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06041) நாளை காலை 9.45 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (5-ந்தேதி) மதியம் 1 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06042) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல, கோவையிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 11.30 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06043) மறுநாள் காலை 8.20 மணிக்குச் சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (5-ந்தேதி) காலை 10.20 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06044) அதேநாள் இரவு 8.25 மணிக்குக் கோவை சென்றடையும்”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.