திருநெல்வேலி

கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் நெல்லைஇடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

பெரும்பாலானோர் கோடை விடுமுறையையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும்.

தென்னக ரயில்வே கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் இந்த ரயில் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும் இந்த ரயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.