‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களின் பொங்கல் தின சிறப்பு காட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 13 முதல் 16 ம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் அதிகாலை 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.

மேலும், அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் குறித்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தவிர, இதுகுறித்த புகார்களை தெரிவிக்க உதவியாக மாவட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை டிக்கெட் பின்புறம் அச்சிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு கருத்து கேட்டு நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், 13 முதல் 16 வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.