விலங்குகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள்வதற்காகவும், விலங்குகள் நல வாரியத்துட்ன் ஒருங்கிணைந்து செயல்படவும் காவல்துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தமிழ்நாடு காவல்துறையின் மாநில நோடல் அதிகாரியாக காவல் கண்காணிப்பாளர் சண்முக பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் அளிக்கப்படும் என்றும் மாநகரங்களின் காவல் ஆணையர்களும் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களும் தங்கள் தலைமையகத்தில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.