சென்னை: சட்டமன்ற  உறுப்பினர்களை, சட்டப்பேரவையில் எங்கு அமர வைக்க வேண்டும்  என்பது குறித்த முடிவெடுப்பது சபாநாயகரின் உரிமை, அதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

சட்டமன்ற தேர்தலின்போது, திமுக கூட்டணி கட்சிகள் சில, திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. இதனால், அவர்கள் திமுக கொறடாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை,  எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது , மனுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி,  சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை  எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி .லோகநாதன் அளித்த மனுவை தள்ளுபடி  செய்தார்.