சென்னை: சென்னை புறநகர் ரயில் சேவை நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே கூறி உள்ளதாவது: சென்ட்ரல் – கூடூர், எனாவூர் – கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12.40-க்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35-க்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 3.10-க்கு சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 5.15-க்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.