துரை

மிழக அரசு விரவில் வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வர உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிவகாசி ஆணையூர் அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த ஏ.எஸ்.கருணாகரன், தாக்கல் செய்த மனுவில் ”ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பலர் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். பட்டா நிலங்களில் பல நாட்களாகப் பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளைச் சரி செய்து அதில் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்கின்றனர்.

இதை அனுமதித்தால் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப்போக வாய்ப்புள்ளது. எனவே, அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் பட்டா நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து வணிக நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்”. என்று கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீர்வளத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். நேற்று இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிட்டார்.

உயர்நீதிமன்றத்துக்கு நீர்வளத்துறை செயலாளர் அளித்த பதில் மனுவில்,

”நிலத்தடி நீர் குறித்து கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அரசாணை அடிப்படையில் நிலத்தடி நீரை எடுக்க உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும்.

நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுப்பதை வரைமுறைப்படுத்தும் சட்டம் உயர் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. மசோதா இறுதி செய்யப்பட்டதும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும்”

எனக் கூறப்பட்டிருந்தது.

விசாரணையை ஆக. 11-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.