சென்னை

ன்றும் நாளையும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.  தற்போது தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும்  நாளையும்  மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆயினும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை  வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ‘கோமுகி அணை 7 செ.மீ., சித்தம்பட்டி 6 செ.மீ., தனிமங்கலம், கும்பகோணம், காட்டுமயிலூர், மேலூர், மேட்டுப்பட்டி, தல்லாகுளம், கொடைக்கானல் பகுதிகளில் தலா 5 செ.மீ. கமுதி, கிழாநிலை, சிங்கம்புனரி, உளுந்தூர்பேட்டை, வம்பன், திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., தேவக்கோட்டை, மதுரை தெற்கு, பார்வூட், திருவிடைமருதூர், திருமயம், கல்லிக்குடி, மஞ்சளாறு, சத்தியார், தொண்டி, இடையபட்டி, பில்லிமலை எஸ்டேட், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.