சென்னை:
சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “கொரோனா தொற்றில் இருந்து திருமதி சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வேண்டும். தொற்றுநோய் இன்னும் நீங்காததால், பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.