டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற  மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, தற்போதைய இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தார்,

24ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 17ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில்   7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார்கே தீபாவளிக்கு பிறகு, தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று  காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தற்போதைய இடைக்கால தலைவர் சோனியாகாந்தி நேரில் வந்து, மலர்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீமதி. பிரியங்கா காந்தியும் கார்கே வுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கார்கே மனைவுயை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த சோனியாகாந்தி, கார்கே குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.