தெலுங்கானா:
காங்கிரஸ் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தவர் சோனியா காந்தி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நடந்த விழாவில் பேசிய அவர், இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்றவர்கள் என்னை போன்ற ஏழை தொண்டர்களை ஊக்குவிக்காமல் இருந்த்திருந்தால், இன்று நான் சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.