உத்தரபிரதேசம்;
த்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் உ.பி. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியெழுந்துள்ளது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி.