கர்நாடகா:
ர்நாடக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் இன்று ராகுல் இன்று பரப்புரை செய்ய உள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது . இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் போட்டியாளர்களை இறுதி செய்ய விரைந்துள்ளன. நேற்று  காங்கிரஸ் தனது 43 வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை வெளியிட்டது. ஆனால் கோலார் தொகுதியில் இன்னும் சித்தராமையாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. மேலும், அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறினர். முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோலாரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.