மதுரை:

னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

சொல்வதெல்லாம் நிகழச்சி தனிமனித உரிமையில் தலையிடுகிறது என்று கூறி, அந்த  நிகழ்ச்சிக்கு தடை கோரி விருதுநகர் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதி மன்ற கிளை, நிகழ்ச்சி ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் இந்த நிகழ்ச்சியை  லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டதாகவும், தேவையில்லாததை பேசி குடும்பத்திற்கும் மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.  ‘சொல்வதெல்லாம் உண்மை’  உண்மை நிகழ்ச்சியில், உண்மை  பேசப்படுகிறதா என்றும் கேள்விகள் பல எழுந்ததுண்டு.

இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.