மதுரை:
சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 25ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வருகிற 25-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று சூரிய கிரகணம் மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும். அந்த நேரத்தில் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.