சென்னை:அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ஸ்மார்ட் கார்டுகள்  தயாரிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி இருக்கிறது

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் வருகை, அவர்களின் பணி நேரத்தை கணக்கிட க்யூஆர் கோடுடன்(QR) கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி, அரசு பள்ளி ஆசியர்கள், பணியாளர்களின் முழு விவரங்கள், புகைப்படங்களை வரும் 25ம் தேதிக்குள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆசியர்களின்  விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பணிக்காக, 1.17 கோடி செலவாகும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.