து ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும்.

சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ, பிறவகைகளிலோ பிரச்சனை இருந்தால் இங்குள்ள சீதேவி அம்மனிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும்.
உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது.

ஆனி மாதம் தேர்திருவிழா இங்கு நடைபெறும். தேர் திருவிழாவின் போது முதல் மூன்று மாதத்திற்கு முன்னால் தேங்காய் தட்டுதல் விழா என்றொரு விழா நடக்கிறது.

இந்த விழாவை தேர் முகூர்த்தம் என்பர் .சீதேவியம்மன் தன் தங்கை கொண்டத்து காளியை அடிமைப்படுத்தியவரிடமிருந்து விடுவித்ததால், பல்வேறு சூழ்நிலைகளில் கொடுமைப்படுத்தப்படுவதாக எண்ணப்படும் பெண்களும், நீண்டகாலம் குழந்தை இல்லாதவர்களும் இங்கு மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக் கொள்கின்றனர்.

ஆனி மாதம் பூக்குழி திருவிழா நடக்கிறது. பக்தர்கள் பூஜாரியோடு 60 அடிநீளம் கொண்ட குண்டத்தில் வெள்ளை ஆடை உடுத்தி அக்னிக்குண்டம் இறங்குகின்றனர். இந்த பக்தர்களை வீரமக்கள் என்பர். கால்நடைகளுக்கும் நோய் நொடி வராமல் இருப்பதற்காக வெள்ளை குதிரை ஒன்றும் அக்னி குண்டத்தில் இறங்குகிறது.

காஞ்சிக்கோயில் சீதேவி அம்மனின் தங்கை பாரியூர் கொண்டத்து காளியம்மன். விவசாயி ஒருவன் கொண்டத்துக் காளியம்மனை தன் மந்திரச் சொல்லால் கட்டி அடிமைப்படுத்தினான்.

மந்திரத்துக்கு காளி கட்டுப்படும் வழக்கமுடையவள். ஒருமுறை காஞ்சிக்கோயில் திருவிழாவிற்கு சீதேவியம்மன், காளியம்மனை அழைக்க சென்றாள்.

அடிமைப்பட்டிருந்த தங்கையின் நிலை கண்டு கொதித்த அவள், விவசாயியை அழித்தாள். சர்வசக்தியும் வாய்ந்த அவளுக்கு கோயில் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.