சென்னை:

ரும் 2020-21 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சென்னையில்  உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு ஒற்றை சாளர சேர்க்கை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பிளஸ்2 வகுப்பு மதிப்பெண் களின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெறும் பல்வேறு குளறு படிகளைத் தடுக்க, ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கல்வியாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், நீட் போன்ற தேர்வை எதிர்கொள்ள முடியாமல், கலை, அறிவியல் படிப்புகளையே நாடி வருகின்றனர். மேலும்  குறைந்த செலவில் பட்டங்கள் பெற கலை அறிவியல் (ஆர்ட்ஸ்) படிப்புகளே சிறந்தது என்று மக்களிடையே அபிப்பிராயம் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில்,   கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இந்த கல்லூரிகளும் கட்டணங்களை அதிகத்துள்ளன. மேலும், பல கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள்,  முதலில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேரும் மாணவர்கள் பிறகு, தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்துச் செல்லும்போது, முன்னர் சேர்ந்த கல்லூரியில் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடிவதில்லை. மேலும், சில கல்லூரிகள் 3 ஆண்டுக்குரிய பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்களை வழங்குகின்றன.

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். ஆனால், தனியார் கல்லூரிகளின் நிர்பந்தத்தால், அரசு ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தாமல் காலம் தாழ்த்தப்ப பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்த முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், முதல்கட்டமாக சென்னையில் உள்ள ஆர்ட்ஸ் காலேஜில் ஒன்றை சாளர முறை யில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட அரசுக் கலைக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், 130-க்கும் மேற்பட்ட உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 400-க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் மாணவர்கள் பிளஸ் 2-வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

பொதுவாக இதுபோன்ற ஆர்ட்ஸ் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 12 நாள்கள் கழித்தே சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். பிறகு, விண்ணப்ப விநியோகம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவது, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது, அதை அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது என பல நடைமுறைகள் உள்ளன. ஆனால், இவை ஏதும் கடைபிடிக்கப்படுவது இல்லை.

பிளஸ்2 தேர்வு முடிவு வந்த சில மணி நேரங்களிலேயே  பல கல்லூரிகளில் மாணவர்  சேர்க்கை நிறைவடைந்து விடுகிறது. அதுபோல, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியில் உள்ள கல்லூரியிலும் ஒவ்வொரு மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், நல்ல மதிப்பெண் கொண்ட கிராமப்புற ஏழை மாணவருக்குத் தரமான கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில்,   அனைத்து கலை, அறிவியல் படிப்புகளிலும் சேருவதற்கு ஆன்லைனில் ஒரே விண்ணப்பத்தை அனுப்பி, அதற்கு மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் தயாரித்து, அதன்படி தகுதியானவருக்குத் தகுதியான கல்லூரியில் இடம் வழங்கப்பட வேண்டும். மாநில அளவிலோ, மண்டல அளவிலோ மாணவர் சேர்க்கையை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாகக் கருதினால் முதல்கட்டமாக பல்கலைக்கழங்கள் அளவிலாவது இந்த முறையை அமல்படுத்த வேண்டும்.

ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது ஒன்றே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதை சாத்தியப்படுத்தும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவது குறித்து ,  அனைத்து கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குநர்கள் தங்கள் கருத்தைக் கூறலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த ஆண்டு சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைக்கல்லூரிகளில்,  பல்வேறு வகையான படிப்புகள், வெவ்வேறு கட்டண அமைப்பு மற்றும் அரசாங்க ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஏற்பாடுகள் இல்லாததால் அதை முழு மாநிலத்திற்கும் விரிவுபடுத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

“தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976, அரசாங்க ஒதுக்கீட்டு இடங்களுக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. உதவி பெறும் சிறுபான்மையினர், உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் தனியார் கல்லூரி களில் அரசாங்க ஒதுக்கீட்டு இடங்களை ஒதுக்கும் தற்போதைய சட்டத்தில் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஒற்றை சாளர சேர்க்கை நடத்த முடியாது, ”என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ஒன்றை சாரள முறையில் மாணவர் சேர்க்க முதல்கட்டமாக சென்னை பிராந்திய கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால், பல தனியார் கல்லூரிகள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தங்கள் கல்லூரிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாகவும், ஆனால், பாடத்திட்டங்கள், கட்டணங்கள் வேறுபடும்போது, ஒற்றைச் சாளர முறையை எப்படி அமல்படுத்த முடியும் என்றும் கேள்வி விடுத்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 யுஜி மாணவர்களை அனுமதிக்கும் சென்னை பிராந்தியத்தில் சுமார் 120 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.  பெரும்பாலான தனியார் கல்லூரிகள் ஒற்றைச் சாளர முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து கூறிய எம்ஓபி வைஷ்ணவி மகளிர் கல்லூரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்துவதற்கு முன்பு அவர்கள் கட்டணம் மற்றும் படிப்பு தொடர்பான  எல்லா காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும், ”என்று கூறி உள்ளார்.

அதுபோல ஒற்றைச் சாளர முறை குறித்து கூறும் லயோலா கல்லூரியின் முதல்வர் ரெவரண்ட் தாமஸ் அமிர்தம்,  “இது கிராமப்புற மற்றும் ஏழை பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தோல்வியைத்தான்  கொடுக்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது போன்ற  செயல்களால், அவர்கள் தோல்வி அடைவார்கள் என்று தெரிவிக்கிறார். மேலும், தங்களது கல்லூரியில்,  30% இடங்கள் சமூக பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக மோசமான பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

ஆசன் மெமோரியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.ராமநாதன்,  “புதிய செயல்பாட்டில், மாணவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை பெறுவார்கள், மேலும் கிரீமிலேயரில் இருந்து மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். மற்ற மாணவர்கள் தவறவிடுவார்கள். இதுகுறித்து,  கல்வியாளர்களின் குழு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்றும்,  “முழு மாநிலத்துக்கும் முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பிரச்சினைகளை அடையாளம் காண ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

ஒற்றை சாளர சேர்க்கை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று குருநானக் கல்லூரியின் முதல்வர் எம் ஜி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பெறும் தகுதி அடிப்படையிலான முறையை நாங்கள் பின்பற்றுகிறோம், என்று கூறுகிறார், மெட்ராஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. துரைசாமி, மேலும், மாநில அளவில் சேர்க்கைகளை நடத்துவதற்கு பதிலாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பல்கலைக்கழக அளவிலான சேர்க்கைகளைப் பின்பற்றலாம்  என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

ஒற்றை சாரள முறைக்கு மாணவர்களிடையே வரவேற்பு உள்ள நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.