மைசூரு

பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி தவறி விழுந்ததால் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் புகழ் பெற்ற பின்னணி பாடகி எஸ் ஜானகி ஆவார். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி உள்ள எஸ் ஜானகிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வயது மூப்பு காரணமாக அவர் தற்போது பாடல்கள பாடுவதையும் இன்னிசை நிகழ்வில் கலந்துக் கொள்வதையும் முழுமையாக நிறுத்தி உள்ளார்.

மைசூரில் உள்ள் தனது உறவினர் வீட்டுக்கு எஸ் ஜானகி சென்று சில தினங்களாக தங்கி இருந்தார். அங்கு தனது உறவினர் குழந்தைகளுடன் எஸ் ஜானகி சந்தோஷமாக விளையாடிக் கொண்டு இருந்தார். அபோது எதிர்பாராமல் திடீரென கால் தவறி கிழே விழுந்துள்ளார். பதறிப் போன உறவினர்கள் அவரை மைசூரில் உள்ள தனியார் மருத்ஹ்டுவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருடைய இடுப்பு பகுதியில் எலும்பு முறிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஒட்டி அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவர் இந்த எலும்பு முறிவு லேசானது எனவும் அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் எனவும் தெரிவித்துள்ளார்.