சென்னை,

மிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை மூட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதன் அடிப்படையில்  ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை பங்குகளை மூட ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும்  ஞாயிற்றுக்கிழமை  பெட்ரோல் பங்குகளை மூடுவது என  தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியே‌ஷன் முடிவு எடுத்துள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக வரும் மே 14 முதல் பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது.