தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவரான சிம்பு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில், சிம்புவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் அம்மா உஷா ராஜேந்திரன் உறவுக்கார பெண்ணை தான் சிம்பு திருமணம் செய்துகொள்ள போவதாகவும், ஜாதகம் ஒத்து போயுள்ளதால், டி.ராஜேந்திரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என தகவல் பரவியுள்ளது.

இவ்வாறு சிம்புவைச் சுற்றி தொடர்ச்சியாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு :- என் திருமணம் குறித்த சில வதந்திகள் என் காதுகளுக்கு வருகிறது. நான் தெளிவுபட கூற விரும்புகிறேன், அந்தமாதிரி திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை, இது குறித்து ஏதேனும் முடிவோ, சம்மதமோ இருந்தால் அதனை நான் குறித்த நேரத்தில் குறித்த வழிமுறையில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.