தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சித்தார்த்.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தனது தயாரிப்பில் அடுத்த படத்தைத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் புதிய படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கவுள்ளார். ‘நவரசா’ ஆந்தாலஜியில் ரதீந்திரன் இயக்கியுள்ள படத்தில் நடித்திருப்பவர் சித்தார்த். அவருடைய இயக்கம், கதை சொல்லும் விதம் ஆகியவை பிடித்திருந்ததால், ரதீந்திரன் இயக்கும் அடுத்த படத்தைத் தயாரித்து நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.