டெல்லி:

லைநகரில் ஆம்ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில், ஆம்ஆத்மி தொண்டர் ஒருவர் பலியான நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி, பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. அங்கு தேசிய கட்சிகளாக பாஜக,காங்கிரஸ் படுதோல்வியை சந்திது உள்ளன. வரும் 16ந்தேதி ஆம்ஆத்மி அரசு பதவி ஏற்க உள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் வெற்றியை சந்தோசமாக கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந் த கட்சியைச் சேர்நத்  எம்எல்ஏ நரேஷ் யாதவ் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து சென்ற அவரது கான்வாய் கிசர்கஞ்ச் அருகே சென்றபோது, அவரது  வாகனத்தை நோக்கி ஓடி வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் நரேஷ் யாதவ் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார் . ஆனால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிர் இழந்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என நரேஷ் யாதவ் கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது.