டெல்லி:

லைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையில்,  ஆம்ஆத்மி கட்சி வெற்றிக்கு ப.சிதம்பரம் உள்பட சிலர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதற்கு கடும்  கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு விளக்கம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பி.சி.சாக்கோ, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு   கடந்த  2013ம் ஆண்டு டெல்லி முதல்வராக  ஷீலா தீட்சித்  இருந்தபோது சரிய தொடங்கி விட்டதாக தெரிவித்திருந்தார், மேலும்,  ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசின் மொத்த வாக்கு வங்கியையும் கைப்பற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்து அறிவித்து உள்ளார். தனது  ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்காலத்  தலைவர் திருமதி சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.