சென்னை:
ழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் அவர்களின் மகன் எம்.என். அஜய் தென்னவன் – ஆர். பாரதி ஆகியோரின் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசினார். அப்போது, நம்முடைய மணமக்களை நான் வாழ்த்துகிற நேரத்தில் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், ‘வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக’ மணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி.. வணக்கம்…” எனத் தெரிவித்துள்ளார்.