‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இராவண கோட்டம்’.

கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கிறார்.

ராமநாதபுரத்தில் இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இந்த நிலையில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் தன்னுடைய பிறந்தநாளை ‘ராவணக்கோட்டம்’ படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். அவரது தந்தையும் இயக்குநருமான பாக்யராஜ், படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு இணைந்து தன்னுடைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.