சென்னை: தமிழ்நாட்டில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சேட்டைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆசிரியர், ஓய்வுபெற்ற ஆசிரியர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் என 3 பேர்  கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விருதுநகரில் 22வயது இளம்பெண்ணை 4 சிறுவன்கள் உள்பட 8 பேர் சேர்ந்து கடந்த இரு மாதங்களாக பொள்ளாச்சி  பாலியல் சம்பவங்களைப் போல வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி மாணவிகள், சிறுமிகள் மீதான பாலியல் சேட்டைகளும் அதிகரித்து வருகிறது.

பொள்ளாச்சியில் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். 74 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியரான எபனேசர் என்பவர், பொள்ளாச்சி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாயார், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் எபினேசர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை போக்சோ நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதுபோல, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்யாறு அரச பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணா மலை அருகே செய்யாறு  வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் அரசு தொடக்கப் பள்ளியில் 4வது வகுப்பு படித்து வரும் மாணவியிடம், 57 வயதுடைய ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் சில நாட்களாக பாலியல் சேட்டை செய்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவி, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின பேரில், பணியாற்றி வருபவர் ராமலிங்கம் (57). இவர். இதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவியிடம் கடந்த சில நாட்களாக தகாத முறையில் வற்புறுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். ஆசிரியர் ராமலிங்கம் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் மணிமாறன், டியூசன்  படிக்க வந்த மாணவி உள்பட 2 பேரை கடத்திய வழக்கில்  கைது செய்யப் பட்டார்.  விசாரணையில் ஆசிரியர் மணிமாறன் என்பவர், அரசு பள்ளியில் ஒழுங்கினமாக நடந்துகொண்டதால், 2019 ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யபட்டதாகவும், அதைத் தொடர்ந்து தனியாக டியூசன் எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.  அவர் தங்கியிருந்த அறையின் பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறிய மணிமாறன் சிறுமியை கடத்திச் சென்றார்.

இந்தசம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் கடத்தல், போக்சோ உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது அவர்  கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அவரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை யினர் இறங்கிய நிலையில்,  இதற்கிடையில், ஆசிரியர் மணிமாறன், அந்த வீட்டின் உரிமையாளரின் 19 வயது மகளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு அந்த மாணவியையும் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று தலைமறைவாகி உள்ளார்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியையும், கன்னியாகுமரியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அப்போது, அவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற  கோவை தனிப்படை போலீசார், ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறுமி மற்றும் இளம் பெண் ஆகிய இருவரையும் மீட்டனர்.

விசாரணையில், தான் கடத்திய இரு சிறுமிகளையும், தனது ஆசைக்கு பயன்படுத்தியதுடன்,  திருப்பதியில் தெரு தெருவாக டீ விற்க வைத்தது தெரியவந்தது. ஏற்கனவே மணிமாறன் மீது  பண மோசடி உள்பட பல்வேறு புகார்கள் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேலூரிலும் இதுபோன்ற பாலியம் சம்பவம் அரங்கேறி உள்ளது. தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை  செய்த கொடூரம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிரிவலம் சாலையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் 2 நாட்களுக்கு முன்பு  தியேட்டருக்கு படம் பார்க்க சென்று உள்ளார். படம் முடிந்து இரவு 12.30மணிக்கு மருத்துவர் ஆட்டோக்காக தியேட்டர் முன்பு காத்திருந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளது. வேலூர் அருகே உள்ள  பாலாற்றின் கரை அந்த பெண் மருத்துவமனை கத்திமுனையில்  மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்தால் மானம் போய்விடும் என எண்ணி புகார் அளிக்காமல் இருந்த நிலையில், மறறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அதில், 3 பேர்  18 வயதுக்குக் வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் ஒழுங்கை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது, வேலியே பயிரை மேயும் செயலாகவே உள்ளது. இதை தடுக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. 

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….