சென்னை: பாலியல் புகார் காரணமாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை பிராட்வே பகுதியில் தடகள பயிற்சி அகாடமியை  நடத்தி வந்தவர் தடகள பயிற்சியாளர் நாகராஜன். இவர் தனது, தடகள பயிற்சி அகாடமிக்கு பயிற்சிக்கு வந்த வீராங்கனையருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில பெண்கள் அளித்த புகாரன்பேரில் பூக்கடை மகளிர் போலீசார் அவரை கைதுமு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் குண்டமும் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில்,  தடகள பயிற்சியாளர்கள் நாகராஜன் மீது காவல்துறையினர் சுமார் 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை யை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.  போக்சோ நீதிமன்றத்தில் நாகராஜன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.