குடியாத்தம்
கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்தவர்கள் அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ளனர்.
திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பணி புரிந்து வருகிறார். தற்போது 4 மாத கர்ப்மாக உள்ள அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக நேற்று கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தார்.
அந்த ரயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது இளம் பெண் கழிவறைக்கு சென்றபோது அங்கு போதையில் இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் போதை நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் வேறொரு பொது பெட்டிக்கு சென்று தப்பினர்.
தண்டவாளத்தின் அருகே படுகாயத்துடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.