சென்னை: பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணைக்கு இன்று சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜரானார். அவரிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அங்கு பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையின்போது, சிறப்பு டிஜிபியை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன் என்று  கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார்  இன்று ராஜேஸ்தாசை விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதன்படி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும்,  சிறப்பு டிஜிபி மீதான புகார் குறித்து பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.