வாணியம்பாடி: வாணியம்பாடியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு காரணமாக விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  சார் நிலை கருவூலம் செயல்பட்டு வருகின்றது. இந்த கருவூலத்தில் ரூ 10 முதல் 10000 வரை முத்திரைத் தாள்கள் வழங்கப்பட்டு வந்தன.
அதனை முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வாங்கி விற்பனை செய்து வந்தனர். இந் நிலையில் 6 மாதங்களாக ரூ 10, 20, 50, 100, 1000 உள்ளிட்ட முத்திரை தாள்கள் கிடைப்பதில்லை.
அதன் காரணமாக முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். பொதுமக்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும்,  முத்திரைத்தாள் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.