சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 25 ஆவதுமுறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

செந்தில் பாலாஜி தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக முன்னிறுத்தப்பட்டார். அவரை வருகிற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் 25 ஆவதுமுறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.